/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கல்வித்துறையில் இன்று குறைகேட்பு கூட்டம்
/
கல்வித்துறையில் இன்று குறைகேட்பு கூட்டம்
ADDED : ஜூலை 19, 2025 03:05 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், ஆசிரியர்கள், கல்வித்துறை பணியாளர்களுக்கான குறைகேட்புக் கூட்டம் இன்று நடக்கிறது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன் செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில், பள்ளிகள், வட்டார வளமையங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கான குறைகேட்புக் கூட்டம் இன்று 19ம் தேதி சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு நடக்கிறது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகங்கள், வட்டார கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைவருக்கும் கல்வித் திட்ட அலுவலகங்களில் நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்று பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.