/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குறைதீர்ப்பு கூட்டம் 602 மனுக்கள் குவிந்தன
/
குறைதீர்ப்பு கூட்டம் 602 மனுக்கள் குவிந்தன
ADDED : ஜூன் 10, 2025 06:45 AM

விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடந்தது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். இதில், வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 602 மனுக்கள் பெறப்பட்டது. கூட்டத்தில், விக்கிரவாண்டி தாலுகா அன்னியூரை சேர்ந்த மல்லிகா ஏரியில் தவறி விழுந்து இறந்ததற்கும், மேல்மலையனுார் தாலுகா தேப்பிராம்பட்டு சரவணன் பாம்பு கடித்து இறந்ததற்கும் தலா ஒரு லட்சம் வீதம் முதல்வர் பொது நிவாரண நிதியில் நிவாரண உதவியை கலெக்டர் வழங்கினார். டி.ஆர்.ஓ. அரிதாஸ், உதவி கலெக்டர் (பயிற்சி) வெங்கடேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.