sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கிண்டி காலணி நிறுவனத்தில் தொழிற்கல்வி சேர்க்கை விழுப்புரம் மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

/

கிண்டி காலணி நிறுவனத்தில் தொழிற்கல்வி சேர்க்கை விழுப்புரம் மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

கிண்டி காலணி நிறுவனத்தில் தொழிற்கல்வி சேர்க்கை விழுப்புரம் மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

கிண்டி காலணி நிறுவனத்தில் தொழிற்கல்வி சேர்க்கை விழுப்புரம் மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : மே 14, 2025 12:47 AM

Google News

ADDED : மே 14, 2025 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : கிண்டி காலணி நிறுவனத்தில், தொழிற்கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பங்களை விழுப்புரத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம்என அறிவிக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;

திண்டிவனம் சிப்காட் தொழிற்பூங்கா, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை மற்றும் அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் தாலுகாவில் 3 புதிய காலணி உற்பத்தி நிறுவனங்கள் விரைவில் செயல்பட உள்ளது. இந்நிறுவனம் ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் 10,000 முதல் 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தொழிற்சாலைகளுக்கு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பணியில் சேர, காலணி தயாரிப்பு தொடர்புடைய பாடப்பிரிவு படித்திருக்க வேண்டும். இதற்காக மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சென்னை கிண்டியில் செயல்படும், மத்திய காலணி நிறுவனத்தில் பயிற்சி முடித்திருக்க வேண்டும். இந்த பயிற்சி நிறுவனத்தில், 2025 - 26ம் ஆண்டு சேர்வதற்கான தொழிற்கல்வி சேர்க்கை அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

விருப்பமுள்ள இளைஞர்கள் அதற்கான சேர்க்கை விண்ணப்பத்தை கலெக்டர் அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு பயன் பெறலாம். விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இப்பயிற்சியில் தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த மாண வர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

விழுப்புரம் மாவட்டத்தில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் தொழிற்கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இன்று 14 முதல் 16ம் தேதி வரை விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மணிகண்டன், சேகர் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோரை 9677943633, 9677943733, 9025997996 மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us