ADDED : நவ 07, 2025 11:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் வீட்டில் குட்கா பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது, வடக்கு ரயில்வே காலனி பகுதியில் பிருந்தாகுமார், 38; என்பவரது வீட்டில், குட்கா பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து, பிருந்தாகுமார் மீது வழக்கு பதிந்த அவரை கைது செய்து, 50 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

