ADDED : செப் 27, 2024 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பங்க் கடையில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் நேற்று அய்யூர் அகரம் பகுதியில் ரோந்து சென்றனர்.
அங்குள்ள பெட்டிக்கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொட்டலங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த பூமிநாதன், 44; என்பவரை கைது செய்தனர். கடையிலிருந்த 42 குட்கா பொட்டலங்களை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.