ADDED : ஏப் 24, 2025 05:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே குட்கா பாக்கெட்டுகளை கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
விக்கிரவாண்டி சப்இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் பனையபுரம் கூட்ரோட்டில் வாகன தணிக்கை செய்தனர். அவ்வழியாக ஸ்கூட்டரில் வந்த நபரை நிறுத்தினர்.
வாலிபர் ஸ்கூட்டரை நிறுத்தாமல் சென்றதால், போலீசார் துரத்தி பிடித்தனர். விசாரணையில், சிந்தாமணியை சேர்ந்த சிவக்குமார், 40; என்பதும், ஸ்கூட்டரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 309 ஹான்ஸ், கூல் லிப் உள்ளிட்ட குட்கா பாக்கெட்டுகள் கடத்தி செல்வதும் தெரியவந்தது. விக்கிரவாண்டி போலீசார் சிவக்குமாரை கைது செய்தனர்.

