ADDED : செப் 01, 2025 11:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே குட்கா கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் ஜானகிபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்காளம்மன் கோவில் அருகே பைக்கில் குட்கா கடத்தி வந்த அதே பகுதியைச் சேர்ந்த சாமிக்கண்ணு மகன் குமார், 47; என்பவரை கைது செய்து அவரிடமிருந்த ஒன்றரை கிலோ குட்கா பொட்டலங்கள் மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.