/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அதிவிரைவு ரயிலில் குட்கா பொருட்கள்
/
அதிவிரைவு ரயிலில் குட்கா பொருட்கள்
ADDED : மார் 22, 2025 03:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் அதிவிரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த 20 கிலோ குட்கா பொருட்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் ரயில் நிலையம் 5வது பிளாட்பாரத்தில் நேற்று காலை 10:15 மணிக்கு, ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் முத்துசெல்வம், போலீசார் திவாகர், பார்த்திபன் ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது காச்சிகுடா - புதுச்சேரி அதிவிரைவு ரயிலில், கேட்பாரற்று கிடந்த 20 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.