sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

செப்டிக் டேங்க் கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு

/

செப்டிக் டேங்க் கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு

செப்டிக் டேங்க் கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு

செப்டிக் டேங்க் கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு


ADDED : மார் 18, 2025 04:48 AM

Google News

ADDED : மார் 18, 2025 04:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: காகுப்பம், எருமனந்தாங்கல் பகுதியில் உள்ள நிலப்பகுதியில், லாரிகளில் கொண்டு வந்து, செப்டிக் டேங்க் கழிவு நீரை வெளியேற்றுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம், காகுப்பம் மெயின் ரோடு அருகே நேற்று செப்டிக் டேங்க் கழிவுகள் உள்ளிட்ட கழிவுநீர் எடுத்து வந்து ஊற்றிய லாரியை, பொது மக்கள் சிலர் தடுத்தபோது, அதன் ஓட்டுநர், அவர்களை மிரட்டி சென்றுள்ளார். இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், 'காகுப்பம் மெயின் ரோடில் உள்ள காலி இடங்கள், நிலப் பகுதியில், தினசரி டேங்கர் லாரிகளில் செப்டிங் டேங்க் கழிவு நீரை கொண்டு வந்து, பகல் நேரங்களிலேயே சிலர் ஊற்றி செல்கின்றனர். தினம் 10 லாரிகளுக்கு மேல் கொண்டு வந்து ஊற்றுவதால், அந்த பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது.

நில உரிமையாளர்களுக்கும், நகராட்சி அலுவலர்களுக்கும் இவர்கள் பணம் கொடுத்து விட்டு, தொடர்ச்சியாக இங்கு கழிவு நீரை கொட்டி வருகின்றனர்.

திறந்த வெளி கழிப்பிடம் கூடாது என அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், இப்படி மனித கழிவு கலந்த நீரை திறந்த வெளியில் கொட்டுவது தடுக்கப்பட வேண்டும். இது குறித்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, செப்டிங் டேங்க் கழிவுநீர் கொட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்' என்றனர்.






      Dinamalar
      Follow us