ADDED : நவ 12, 2025 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த அன்னியூர் கலைஞர் கருணாநிதி அரசு கல்லுாரியில், வரலாற்று சுவடுகள் நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) அசோகன் தலைமை தாங்கினார். ஜெயந்தி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் அமைப்பு தலைவர் அரியபுத்திரன் முன்னிலை வகித்தார். விழுப்புரம் அண்ணா அரசு கலைக்கல்லுாரி பேராசிரியர் ரமேஷ் மாவட்ட வரலாற்று சுவடுகள் தலைப்பில் பேசினார். ஆசிரியர் கோவிந்தராஜ், பேராசிரியர் சுவாமிநாதன் வாழ்த்திப் பேசினர். பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

