sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 மாணவரை தற்கொலைக்கு துாண்டியவர்கள் மீது நடவடிக்கை கோரி மருத்துவமனையில் முற்றுகை

/

 மாணவரை தற்கொலைக்கு துாண்டியவர்கள் மீது நடவடிக்கை கோரி மருத்துவமனையில் முற்றுகை

 மாணவரை தற்கொலைக்கு துாண்டியவர்கள் மீது நடவடிக்கை கோரி மருத்துவமனையில் முற்றுகை

 மாணவரை தற்கொலைக்கு துாண்டியவர்கள் மீது நடவடிக்கை கோரி மருத்துவமனையில் முற்றுகை


ADDED : நவ 19, 2025 05:57 AM

Google News

ADDED : நவ 19, 2025 05:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே கல்லுாரி மாணவரை தற்கொலைக்குத் துாண்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மருத்துவமனையில், இறந்த மாணவரின் உறவினர்கள் மற்றும் வி.சி., கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வடகுச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் செம்மனேரி மகன் கஜினி, 18; விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரியில் பி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த 6ம் தேதி மாலை கல்லுாரி முடிந்து தனது ஸ்பிளண்டர் பைக்கில் வீடு திரும்பினார். வடக்குச்சிபாளையம் சுடுகாடு அருகே, எதிரே வந்த பைக் கஜினி பைக்கின் மீது மோதியுள்ளது.

அப்போது, அந்த பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 3 பேர் கஜினியை தாக்கியுள்ளனர்.

வீடு திரும்பிய கஜினி மன உளைச்சலில் இருந்த நிலையில், கடந்த 9ம் தேதி வீட்டில் துாக்குப்போட்டு போட்டுக் கொண்டார்.

உடன், உறவினர்கள் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு கஜினி இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மார்ச்சுவரியில் வைக்கப்பட்டடது.

நேற்று பிற்பகல் 2:20 மணியளவில் வி.சி., மாவட்ட செயலாளர் திலீபன் தலைமையில் கட்சியினர் மார்ச்சுவரி முன் அமர்ந்து குற்றவாளிகளை கைது செய்ய கோரியும், உடலை வாங்க மறுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஏ.டி.எஸ்.பி., தினகரன், டி.எஸ்.பி., சரவணன், இன்ஸ்பெக்டர்கள் சத்தியசீலன், செல்வநாயகம் ஆகியோர், வன்கொடுமை சட்டத்தின் கீழ் அரசு நிதி 6 லட்சம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இரவுக்குள் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்தனர்.

அனையேற்று, 3:30 மணியளவில் பிரதே பரிசோகதனைக்குப் பின் கஜினி உடலை பெற்று கலைந்து சென்றனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us