ADDED : செப் 01, 2026 04:51 AM

அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டைச் சேர்ந்தவர் சவுந்திரராஜன், 50; ஓட்டல் கடை உரிமையாளர்.
மகாராஜபுரம், தாமரைக்குளத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன் மகன் தனுசு, 20; இவர், கடந்த 2 நாட்களுக்கு முன் ஓட்டலுக்கு வந்து சவுந்திரராஜனிடம் உணவு கேட்டுள்ளார். அதற்கு அவர் தீர்ந்து விட்டதாக கூறியதால், ஆத்திரமடைந்த தனுசு, நேற்று முன்தினம் இரவு 7:10 மணிக்கு மூடியிருந்த கடையின் முன் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதையறிந்து வந்து தட்டிக் கேட்ட சவுந்திரராஜனை மிரட்டினார்.
விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து தனுசை கைது செய்தனர்.
