/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பா.ஜ., ராஜா மீது மனித நேய மக்கள் கட்சி போலீசில் புகார்
/
பா.ஜ., ராஜா மீது மனித நேய மக்கள் கட்சி போலீசில் புகார்
பா.ஜ., ராஜா மீது மனித நேய மக்கள் கட்சி போலீசில் புகார்
பா.ஜ., ராஜா மீது மனித நேய மக்கள் கட்சி போலீசில் புகார்
ADDED : நவ 09, 2024 08:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: பா.ஜ., ஒருங்கிணைப்பாளர் ராஜா மீது, மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் திண்டிவனம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஜான்பாஷா மற்றும் நிர்வாகிகள் திண்டிவனம் போலீசில் அளித்துள்ள புகார் மனு:
பா.ஜ., மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா கடந்த 7ம் தேதி சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.,வை தேச விரோதி என கூறியுள்ளார்.
மதக்கலவரத்தை துாண்டும் வகையில் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்துள்ள ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.