/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்ய முயற்சித்த கணவர் கைது கண்டங்கலம் அருகே பரபரப்பு
/
மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்ய முயற்சித்த கணவர் கைது கண்டங்கலம் அருகே பரபரப்பு
மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்ய முயற்சித்த கணவர் கைது கண்டங்கலம் அருகே பரபரப்பு
மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்ய முயற்சித்த கணவர் கைது கண்டங்கலம் அருகே பரபரப்பு
ADDED : மார் 05, 2026 03:46 AM

கண்டமங்கலம்: கண்டமங்கலம் அருகே குடும்ப தகராறில் மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்ய முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் வான்பாக்கம் பகுதியை சேர்ந்தவர். விமல்நாதன், 35; தச்சு தொழிலாளி. இவரது மனைவி சந்தியா. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
இவர்கள் விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியம் முட்ராம்பட்டு கிராமத்திலுள்ள மாமியார் வீட்டில் தங்கியிருந்தனர். கடந்த 6 மாதங்களாக கணவன், மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 5;00 மணி அளவில் விமல்நாதன் தூங்கிக் கொண்டிருந்த மனைவி சந்தியாவின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்வதற்கு முயற்சித்துள்ளார். சந்தியாவின் அலறல் சத்தத்தை கேட்ட கிராம மக்கள், அவரை மீட்டு, ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
சம்பவம் குறித்து, சந்தியாவின் தாயார் தாயார் ராஜவேணி கண்டமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்கு பதிவு செய்து, மனைவியை கொலை செய்ய முயன்ற விமல்நாதனை கைது செய்து, விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

