sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மது போதையில் மனைவியை அடித்து கொன்ற கணவர் கைது

/

மது போதையில் மனைவியை அடித்து கொன்ற கணவர் கைது

மது போதையில் மனைவியை அடித்து கொன்ற கணவர் கைது

மது போதையில் மனைவியை அடித்து கொன்ற கணவர் கைது

1


ADDED : ஏப் 14, 2025 12:16 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 12:16 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி; விழுப்புரம் மாவட்டம், தாமரைகுளம் தங்கராசு, 29; கூலி தொழிலாளி. இவரது மனைவி இரு ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்றார்.

இவருக்கு, 4 மற்றும் 2 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், குழந்தைகளை தங்கராசுவின் தாய் வளர்க்கிறார்.

தங்கராசு, ஓராண்டிற்கு முன் செங்கல்பட்டில், செங்கல்சூளையில் வேலை செய்தபோது உடன் வேலை செய்த ரெட்டிப்பாளையத்தை சேர்ந்த, சின்னபொன்னு, 34, என்ற விதவை பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். சின்னபொன்னுவிற்கு, 15, 11 மற்றும் 9 வயதில் மூன்று மகன்கள் உள்ளனர்.

அவர்களை, செவலபுரையில் உள்ள தன் அக்கா வீட்டில் தங்க வைத்துள்ளார். சில மாதங்களாக தங்கராசுவும், சின்னபொன்னும் செஞ்சி செங்கல்சூளையில் வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் வேலை முடிந்து முருகன்தாங்கல் வீட்டிற்கு வந்தனர்.

அங்கு, தாய் வீட்டிற்கு சென்று வருவதாக சின்னு பொன்னு கூறியதால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, போதையில் இருந்த தங்கராசு கட்டையால் தாக்கியதில், தலையில் காயமடைந்த சின்னபொன்னு உயிரிழந்தார். சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து தங்கராசுவை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us