ADDED : பிப் 21, 2024 10:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: காணை அருகே மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
காணை அருகே கப்பூர் காலனியை சேர்ந்தவர் மகாராஜா மனைவி பிரியா,34; இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது. மூன்று மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 18 ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற பிரியா, மீண்டும் வரவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் காணவில்லை.
மகாராஜா அளித்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.