ADDED : ஜூலை 27, 2025 03:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: வீட்டிலிருந்து வெளியே சென்ற மனைவி, மகளை காணவில்லை என கணவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம், சித்தேரிக்கரை பகுதியை சேர்ந்தவர் நடராஜன் மனைவி சங்கீதா,37; இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. பிரனிதா,5; என்ற மகள் உள்ளார். இந்த நிலையில், கடந்த 21ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற சங்கீதா, பிரனிதா ஆகியோர் வீட்டிற்கு மீண்டும் வரவில்லை. இவர்களை, நடராஜன் பல இடங்களில் தேடியும் காணவில்லை. அவர் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

