ADDED : ஜூலை 27, 2025 03:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் கணவரை காணவில்லை என மனைவி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
கிழக்கு பாண்டி சாலையை சேர்ந்தவர் துரைசாமி மகன் துரைராஜ், 43; அங்குள்ள நிதி நிறுவனம் ஒன்றில் தற்காலிகமாக பணிபுரிந்தார்.
இவர், கடந்த 21ம் தேதி வீட்டில் பணிக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வரவில்லை. அவரை மனைவி இந்துமதி பல இடங்களில் தேடியும் காணவில்லை. இவருக்கு, ஒரு மகன், மகள் உள்ளனர். இந்துமதி அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

