நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை; அவலுார்பேட்டையில் பங்குனி உத்திர விழா இடும்பன் பூஜையுடன் நிறைவு பெற்றது.
அவலுார்பேட்டை சித்தகிரி முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா கடந்த 2ம் தேதி துவங்கியது. கடந்த 11ம் தேதி தேரோட்டம் நடந்தது. அதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு இடும்பன் பூஜையுடன் பங்குனி உத்திர விழா நிறைவு பெற்றது.
விழாவில், ஊராட்சி தலைவர் செல்வம், துணைத் தலைவர் சரோஜா ஐயப்பன், ஒன்றிய கவுன்சிலர் ஷாகின்அர்ஷத், அறங்காவலர் குழு தலைவர் சுதாசெல்வம், குழு உறுப்பினர்கள் லதாமுரளி, விவேகானந்தன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.