sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கொத்தடிமை பணியாளர் ஐ.ஜி., அறிவுரை

/

கொத்தடிமை பணியாளர் ஐ.ஜி., அறிவுரை

கொத்தடிமை பணியாளர் ஐ.ஜி., அறிவுரை

கொத்தடிமை பணியாளர் ஐ.ஜி., அறிவுரை


ADDED : செப் 05, 2025 03:30 AM

Google News

ADDED : செப் 05, 2025 03:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்,: விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்களில் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் காவல் பிரிவு பணிகள் குறித்து, காவல் துறை உயரதிகாரிகள் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.

இதில், விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி மாவட்ட டி.எஸ்.பி.,க்கள், சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., உமா, விழுப்புரம் எஸ்.பி., சரவணன் முன்னிலை வகித்தனர்.

சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐ.ஜி., சாமுண்டீஸ்வரி கலந்துகொண்டு, ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மூன்று மாவட்டங்களிலும், மனித உரிமைகள் மீறல்கள், அதுதொடர்பாக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள், எஸ்.சி., -எஸ்.டி., வன்கொடுமை குறித்து பதியப்பட்ட வழக்குகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் நிவாரணம் ஆகியவை குறித்து விசாரித்தார்.

மாவட்டங்களில், கொத்தடிமை பணியாளர் முறை இருந்தால், அதனை கண்டறிந்து, அவர்களை மீட்டு உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று, ஐ.ஜி., சாமுண்டீஸ்வரி அறிவுரை வழங்கினார்.






      Dinamalar
      Follow us