/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பள்ளியில் தேசிய பசுமை படை துவக்கம்
/
அரசு பள்ளியில் தேசிய பசுமை படை துவக்கம்
ADDED : பிப் 21, 2024 10:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை ஆதி திராவிட நல உயர் நிலைப் பள்ளியில் தேசிய பசுமை படை துவக்க விழா நடந்தது.
பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை வாசுகி தலைமை தாங்கினார். முதுநிலை ஆசிரியை விஷ்ணுபிரியா வரவேற்றார்.
மாவட்ட தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் தேசிய பசுமை படை, சுற்று சுழல் மன்றத்தை துவக்கி வைத்து,மரக்கன்றுகளை நட்டு பேசினார்.
இதில் ஆசிரியர் தமிழரசன்,பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.