/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஜெயமுத்து மாரியம்மன் கோவில் தேர் திருவிழா
/
ஜெயமுத்து மாரியம்மன் கோவில் தேர் திருவிழா
ADDED : ஆக 10, 2025 11:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : ஜெயபுரம் ஜெயமுத்து மாரியம்மன் கோவில் ஆடி தேர் திருவிழா நடந்தது.
கோவிலில் 59ம் ஆண்டு வசந்த உற்சவம் கடந்த 5ம் தேதி துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று நடந்தது.
அதனையொட்டி காலை 8:00 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.