sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் ஜோதி தரிசனம்

/

திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் ஜோதி தரிசனம்

திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் ஜோதி தரிசனம்

திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் ஜோதி தரிசனம்


ADDED : ஜூன் 12, 2025 12:27 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார், : திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் பவுர்ணமி ஜோதி தரிசனம் நடந்தது.

வானுார் அடுத்த திருவக்கரையில் பிரசித்தி பெற்ற வக்ரகாளியம்மன், சந்திர மவுலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், வக்ரகாளியம்மன், சந்திரமவுலீஸ்வரர் தனித்தனி சன்னதியில் அருள்பாலித்து வருகின்றனர். இங்கு ஒவ்வொரு பவுர்ணமியின் போதும், ஜோதி தரிசனம் நடைபெறும். நேற்று முன்தினம் பவுர்ணமியை முன்னிட்டு, காலை 6:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

மாலை 6:00 மணிக்கு வக்ரகாளியம்மன், சந்திர மவுலீஸ்வரர், வரதராஜ பெருமாள், வள்ளி, தெய்வானை சுப்ரமணியர் சுவாமிகளுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு விளக்கு பூஜை நடந்தது.

நள்ளிரவு 12:00 மணிக்கு பவுர்ணமியை முன்னிட்டு ஜோதி தரிசன வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையாளர் சக்திவேல், செயல் அலுவலர் ஜெயக்குமார், ஆய்வாளர் உமாமகேஸ்வரி, குருக்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us