sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கடுகப்பட்டு கிராம மக்கள் பஸ் வசதி கேட்டு மறியல்

/

கடுகப்பட்டு கிராம மக்கள் பஸ் வசதி கேட்டு மறியல்

கடுகப்பட்டு கிராம மக்கள் பஸ் வசதி கேட்டு மறியல்

கடுகப்பட்டு கிராம மக்கள் பஸ் வசதி கேட்டு மறியல்


ADDED : ஜன 05, 2025 05:11 AM

Google News

ADDED : ஜன 05, 2025 05:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : கடுகப்பட்டு ஊராட்சி பொது மக்கள் பஸ் வசதி கேட்டு திடீர் சாலை மறியல் செய்தனர்.

வல்லம் ஒன்றியம் கடுகப்பட்டு ஊராட்சியில் 600 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு பஸ் வசதி இல்லாததால் இந்த கிராம மக்கள் 2 கி.மீ., துாரம் நடந்து வந்த செஞ்சி-மேல்ஒலக்கூர் சாலையில் முக்குணம் கூட்ரோட்டில் பஸ் ஏறுகின்றனர்.

கிராமத்தில் இருந்து ஏராளமான மாணவர்கள் வெளியூரில் உள்ள பள்ளி கல்லுாரிகளில் படிக்கின்றனர்.அனைத்து அடிப்படை தேவைகளுக்கு கிராம மக்கள் செஞ்சிக்கு வரும் நிலை உள்ளது. தற்போது கிராமத்திற்கு பஸ் வசதி இல்லை என்பதுடன் கிராம சாலையும் குண்டும் குழியுமாக மாறி உள்ளது.

இதை கண்டிக்கும் வகையில் கிராம மக்கள் நேற்று காலை 10 மணிக்கு மேல்ஒலக்கூரில் இருந்து செஞ்சிக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை முக்குணம் கூட்ரோட்டில் சிறை பிடித்து சாலை மறியல் செய்தனர்.

தகவல் அறிந்து வந்த செஞ்சி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பஸ் வசதி செய்து தரப்படும் என உறுதியளித்தனர்.

இதையடுத்து 10.30 மணியளவில் பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.






      Dinamalar
      Follow us