sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஏரியிலிருந்து வெளியேறிய உபரி நீரால் சேதமான கிளாகுப்பம் தரைப்பாலம் : போக்குவரத்து பாதிப்பால் கிராம மக்கள் அவதி

/

ஏரியிலிருந்து வெளியேறிய உபரி நீரால் சேதமான கிளாகுப்பம் தரைப்பாலம் : போக்குவரத்து பாதிப்பால் கிராம மக்கள் அவதி

ஏரியிலிருந்து வெளியேறிய உபரி நீரால் சேதமான கிளாகுப்பம் தரைப்பாலம் : போக்குவரத்து பாதிப்பால் கிராம மக்கள் அவதி

ஏரியிலிருந்து வெளியேறிய உபரி நீரால் சேதமான கிளாகுப்பம் தரைப்பாலம் : போக்குவரத்து பாதிப்பால் கிராம மக்கள் அவதி


ADDED : அக் 27, 2025 12:19 AM

Google News

ADDED : அக் 27, 2025 12:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை: கோவில்புரையூர் - கிளாகுப்பம் தரைப்பால ம் ஏரியிலிருந்து வெளியேறிய உபரிநீர் வெள்ளத்தில் அடித்து சென்றதால் போக்குவரத்து பாதித்துள்ளது.

மேல்மலையனுார் அடுத்த கோவில்புரையூர் ஊராட்சிக்குட்பட்ட கிளாகுப்பம் கிராமத்திற்கு செல்லும் வழியில் கடந்த 75 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தரைப்பாலம் உள்ளது.

இந்த பாலம் கடந்த 10 ஆண்டுகளாக சேதமாகி, உள்வாங்கி மோசமான நிலையில் இருந்தது. பெஞ்சல் புயல் மழையின் போது வெள்ளம் ஏற்பட்டு, பாலம் மோசமான நிலையில் இருந்தது.

இதனால் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் சில மாதங்களுக்கு முன் மண் கொட்டி போக்குவரத்திற்கு ஏற்ப தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக அவலுார்பேட்டை ஏரி நிரம்பி அதிகளவு உபரி நீர் இந்த தரைப்பாலத்தின் வழியாக சென்றதில் தரைப்பாலத்தின் ஒரு பகுதி அடித்து செல்லப்பட்டு சேதமானது.

இதனால், கிளாகுப்பம் கிராம மக்கள் தரைப்பாலத்தை பயன்படுத்த முடியாத நிலையில், கீக்களூர், செவரப்பூண்டி, அவலுார்பேட்டை வழியாக 15 கி.மீ., துாரம் சுற்றி கோவில்புரையூருக்கு செல்லும் நிலை உள்ளது.

மேலு ம், கிளாகுப்பம், ஆதிகான்புரவடை, கொல்லைமேடு பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களது விளை பொருட்களை நிலத்திலிருந்து அவலுார்பேட்டை மார்க்கெட் கமிட்டிக்கு கொண்டு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வரு கின்றனர்.

இதனைத் தவிர்க்க இப்பகுதியில் பு திதாக சிறு அளவிலான மேம்பாலம் அமைத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us