/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயிலம் முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா
/
மயிலம் முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா
ADDED : டிச 13, 2024 11:17 PM
மயிலம்: மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நடந்தது.
விழாவையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள பாலசித்தர், விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர், நவகிரக சுவாமிகளுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது. 11:00 மணிக்கு பால், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர் போன்ற பொருட்களினால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மாலை 6:00 மணிக்கு சங்கு கன்னர் மண்டபத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. 6:30 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.