sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தங்கும் விடுதி உரிமையாளர்களுடன் கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., ஆலோசனை

/

தங்கும் விடுதி உரிமையாளர்களுடன் கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., ஆலோசனை

தங்கும் விடுதி உரிமையாளர்களுடன் கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., ஆலோசனை

தங்கும் விடுதி உரிமையாளர்களுடன் கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., ஆலோசனை


ADDED : டிச 30, 2024 06:09 AM

Google News

ADDED : டிச 30, 2024 06:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : புத்தாண்டை முன்னிட்டு ஆரோவில் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஓட்டல், விடுதி உரிமையாளர்கள், மேலாளர்களுடன் கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

கோட்டக்குப்பம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆரோவில், இடையஞ்சாவடி, குயிலாப்பாளையம், கோட்டக்கரை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ரிசார்ட், கெஸ்ட் அவுஸ், ஓட்டல்கள் உள்ளன. நாளை மறுநாள் 2025ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாடுவதற்காக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் இப்பகுதியில் குவிந்து வருகின்றன.

மது விருந்தோடு கொண்டாட ஆயத்தமாகும் சுற்றுலாப்பயணிகளால், சட்ட ஒழுங்கு பிரச்னையும் ஏற்படாமல் தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில், தனியார் ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுடன் கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., உமாதேவி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள தனியார் மண்டலத்ததில் நடந்தது.

இதில், ஆரோவில் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது, தங்கும் விடுதிகளில் மது விற்பனை செய்யக்கூடாது.

விருந்தினர்களின் விபரங்களை முறையாக பராமரிக்க வேண்டும். 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு அறைகள் வழங்கக்கூடாது.

அனைத்து விடுதிகளிலும் கண்கானிப்பு கேமரா சரி வர பராமரிக்க வேன்டும். உரிய ஆவணங்கள் இல்லாதவர்களை பணி அமர்த்தக்கூடாது.

பெண்களின் பாதுகாப்பை தங்கும் விடுதிகள் உறுதிபடுத்த வேன்டும். விடுதிகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி இல்லை. மீறி நடத்தும் விடுதிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விடுதிகளில் தங்கியுள்ள விருந்தினர்கள் புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடித்து இரவு 1;00 மணிக்குள் அறைகளுக்கு திரும்ப வேண்டும் என அறிவுறுத்தினார்.






      Dinamalar
      Follow us