sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மயிலம் முருகன் கோவிலில் கிருத்திகை விழா

/

மயிலம் முருகன் கோவிலில் கிருத்திகை விழா

மயிலம் முருகன் கோவிலில் கிருத்திகை விழா

மயிலம் முருகன் கோவிலில் கிருத்திகை விழா


ADDED : ஏப் 29, 2025 11:31 PM

Google News

ADDED : ஏப் 29, 2025 11:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம்:

மயிலம் முருகன் கோவிலில் கிருத்திகை விழா நடந்தது.

மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் கோவிலில் நேற்று முன்னிட்டு அதிகாலை 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு வழக்கமான பூஜைகள் நடந்தது. காலை 11:00 மணிக்கு பாலசித்தர், வினாயகர், வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது.

பகல் 12:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு, மகா தீபாராதனை நடந்தது. மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பிற்பகல் 1:00 மணிக்கு கோவில் மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை 6:00 மணிக்கு கோயில் வளாகத்தில் உள்ள வள்ளி தெய்வானை சுப்பிரமணிய சுவாமிக்கு பால், சந்தனம், பன்னீர், தேன், இளநீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் அபிஷேகமும், மகா தீபாரதனை நடந்தது.

இரவு 8:00 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் கிரிவலத்தில் காட்சியளித்தார். விழா ஏற்பாடுகளை மயிலம் ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us