/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயிலம் கோவிலில் கிருத்திகை விழா
/
மயிலம் கோவிலில் கிருத்திகை விழா
ADDED : ஏப் 02, 2025 03:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம் : மயிலம் முருகன் கோவிலில் பங்குனி மாத கிருத்திகை விழா நடந்தது.
அதனையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 11:00 மணிக்கு பால சித்தர், விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது.
பகல் 12:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு, மகா தீபாராதனை நடந்தது. மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள சுவாமிக்கு அபிஷேகமும், மகா தீபாரதனை வழிபாடும் நடந்தது.
இரவு 8:00 மணிக்கு உற்சவர் கிரிவலம் நடந்தது. விழா ஏற்பாடுகளை மயிலம் ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.