/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குவைத்தில் இருந்து திரும்பியவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலி
/
குவைத்தில் இருந்து திரும்பியவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலி
குவைத்தில் இருந்து திரும்பியவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலி
குவைத்தில் இருந்து திரும்பியவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலி
ADDED : நவ 23, 2024 06:53 AM

திண்டிவனம், : குவைத்தில் இருந்து சொந்த ஊருக்கு ரயிலில் சென்ற வாலிபர் தவறி விழுந்து இறந்தார்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம், அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் ரமேஷ்,35; குவைத்தில் வேலை செய்து வந்த இவர், நேற்று முன்தினம் விமானம் மூலம் சென்னைக்கு வந்தார். அங்கிருந்து திருச்செந்துார் செல்லும் செந்துார் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிதம்பரத்திற்கு புறப்பட்டார்.
ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் ரமேஷ், படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்தார். அன்று இரவு 7:00 மணி அளவில், திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் ரயில் நிலையத்தை கடந்தபோது, படிக்கட்டில் பயணம் செய்த ரமேஷ், எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து இறந்தார்.
செங்கல்பட்டு ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.