ADDED : மே 29, 2025 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: கூலி தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் அடுத்த ஒட்டன்காடுவெட்டியை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 51; கூலி தொழிலாளி. நீண்ட நாட்களாக அல்சர் பிரச்னையால் அவதியடைந்து வந்தார்.
இதனால், மனமுடைந்த அவர் நேற்று காலை விழுப்புரம் தர்மராஜர் தெருவில் உள்ள வாடகை வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.