/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உழவரை தேடி வேளாண் திட்டம் துவக்க விழா
/
உழவரை தேடி வேளாண் திட்டம் துவக்க விழா
ADDED : ஜூன் 01, 2025 11:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒன்றியம், அய்யூர் அகரத்தில் உழவரை தேடி வேளாண் திட்டம் துவக்க விழா நடந்தது.
வட்டார வேளாண் துறை சார்பில் நடந்த விழாவிற்கு, வேளாண் இணை இயக்குநர் ஈஸ்வர் தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் கங்கா கவுரி முன்னிலை வகித்தார். உதவி வேளாண்மை அலுவலர் கவிப்பிரியன் வரவேற்றார்.
ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை திட்டத்தை துவக்கி வைத்தார். விதை பரிசோதகர் தேவி, கால்நடை மருத்துவர் விக்னேஷ், ஒன்றிய செயலாளர் ரவிதுரை மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.