/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கடனை செலுத்தாததால் வீட்டிற்கு பூட்டு: விழுப்புரம் அருகே பரபரப்பு
/
கடனை செலுத்தாததால் வீட்டிற்கு பூட்டு: விழுப்புரம் அருகே பரபரப்பு
கடனை செலுத்தாததால் வீட்டிற்கு பூட்டு: விழுப்புரம் அருகே பரபரப்பு
கடனை செலுத்தாததால் வீட்டிற்கு பூட்டு: விழுப்புரம் அருகே பரபரப்பு
ADDED : ஜூன் 07, 2024 06:37 AM
விழுப்புரம்: காணை அருகே கடனை செலுத்ததால் தொழிலாளியின் வீட்டை பூட்டிய தனியார் நிதி நிறுவன ஊழியர்களால் பரபரப்பு நிலவியது.
காணை அடுத்த வைலாமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தவேல், 40; தையல் தொழிலாளி. இவரது மனைவி இந்திரா. கந்தவேல், வீடு கட்டுவதற்காக கடந்த 2019ம் ஆண்டு தனியார் நிதி நிறுவனம் ஒன்றில், 3.50 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.
கடன் பெற்ற அவர், மாதம்தோறும் தவணை தொகையை தவறாமல் செலுத்திய நிலையில், கொரோனா காலத்தில் தவணை தொகை செலுத்த முடியாமல் போனது.
கடனை கட்டாததால் அந்த நிதி நிறுவனம், கந்தவேல் வீட்டில், நோட்டீஸ் ஒட்டியும், வீட்டு சுவற்றில் எழுதியும் சென்றனர். அதன் பிறகு பல தவணைகளில் கடன் தொகையை செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை 10:00 மணிக்கு மேல் கந்தவேல், வீட்டிற்கு வந்த நிதிநிறுவன ஊழியர்கள் 2 பேர், இன்னும் கடன் தொகை பாக்கி இருப்பதாக கூறி கந்தவேலையும், அவரது மனைவியையும் வீட்டை விட்டு வெளியேற்றி வீட்டை பூட்டி சாவியை எடுத்துச் சென்றனர்.
இதனால் மனமுடைந்த கந்தேவல், அவர் மனைவி இந்திரா இருவரும் பூட்டிய வீட்டின் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்த காணை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரித்தனர். பின், நிதி நிறுவன ஊழியர்களை போலீசார் வரவழைத்து, கந்தவேல் வீட்டின் சாவியை வாங்கி வீட்டு கதவை திறந்து விட்டு, நிதி நிறுவன ஊழியர்களை எச்சரித்துஅனுப்பினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.