sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

லாரி டிரைவர் மாயம் மகன் போலீசில் புகார்

/

லாரி டிரைவர் மாயம் மகன் போலீசில் புகார்

லாரி டிரைவர் மாயம் மகன் போலீசில் புகார்

லாரி டிரைவர் மாயம் மகன் போலீசில் புகார்


ADDED : மே 11, 2025 11:52 PM

Google News

ADDED : மே 11, 2025 11:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் மல்லி லோடு லாரியில் ஏற்றி வந்த தந்தையை காணவில்லை என மகன் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

திருச்சி மாவட்டம், புதுார் கிராமத்தை சேர்ந்தவர் ரவி, 55; இவரும், நாமக்கலை சேர்ந்த கண்ணன் என்பவரும், லாரி டிரைவர்கள்.

இவர்கள் இருவரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் மல்லி லோடு ஏற்றி கொண்டு கடந்த 24ம் தேதி விழுப்புரத்தில் பாதி சரக்கை இறக்கியுள்ளனர்.

மீதி சரக்கை புதுச்சேரியில் இறக்குவதற்காக லாரியை ஜானகிபுரம் பைபாஸ் வழியாக ஓட்டி சென்றனர். இங்கு, ரவி தனது வலதுகால் பாதத்தில் கட்டி உள்ளதால் தான் இறங்கி கொண்டு ஊர் செல்வதாக கண்ணனிடம் தெரிவித்து விட்டு இறங்கியுள்ளார். ஆனால், இவர் வீட்டிற்கு செல்லவில்லை. இவரை குடும்பத்தார் விழுப் புரம் உட்பட பல இடங்களில் தேடியும் காணவில்லை.

இவரது மகன் அஜித்குமார் புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us