ADDED : ஏப் 21, 2025 04:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: வக்ப் திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி மா. கம்யூ., சார்பில், விழுப்புரத்தில் தர்ணா போராட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் குமார், ராதாகிருஷ்ணன், முத்துக்குமரன் முன்னிலை வகித்தனர்.
மாநில செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., ராமமூர்த்தி, தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் கோதண்டம், மாநிலக்குழு உறுப்பினர் கீதா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
சிறுபான்மை மக்களை வஞ்சிக்கும் வக்ப் திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தினர். தமிழ்செல்வி நன்றி கூறினார்.