/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முத்துமாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
/
முத்துமாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
ADDED : ஏப் 17, 2025 05:19 AM

செஞ்சி: செஞ்சி அடுத்த களையூர் முத்து மாரியம்மன் கோவிலில் ஜீர்னோதாரண மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு கோபூஜை, அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி, லட்சுமி, நக்கிரக ஹோமமும், மாலை 4:00 மணிக்கு வாஸ்த்து சாந்தி, பிரவேச பலி, ரக்ஷாபந்தனம், முதற்கால ஹோமம், இரவு 9:00 மணிக்கு மகாபூர்ணாஹூதியும் நடந்தது.
நேற்று காலை திருப்பள்ளி எழுச்சியும், இரண்டாம் கால ஹோமம், நாடி சந்தானம், வேதிகார்ச்சனையும், 9:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி, 9.30 மணிக்கு யாத்ராதானமும், கடம் புறப்பாடும், 10:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. காலை 10.30 மணிக்கு மகா அபிஷேகம் மகாதீபாராதனை நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.