/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஞானவிநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்
/
ஞானவிநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்
ADDED : நவ 08, 2024 11:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் மகாராஜபுரம் இ.பி., காலனி ஞானவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது. மாலை முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது.
தொடர்ந்து கலசபூஜை, யாகசாலை பிரவேசம் நடந்தது.
நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. தீபாராதனையை தொடர்ந்து கடம் புறப்பாடாகி, காலை 9:00 மணிக்கு மூலவர் ஞானவிநாயகர் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.