ADDED : செப் 20, 2025 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : முன்விரோத தகராறில், உறவினரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
செஞ்சி அடுத்த ஊரணிதாங்கலை சேர்ந்தவர் சுப்ரமணி, 39; இவரும் அதே பகுதியை சேர்ந்த உறவினர் சிவக்குமார், 42; என்பவரும், கடந்த 17ம் தேதி இரவு குடிபோதையில் சண்டையிட்டு கொண்டனர். இந்த முன்விரோதம் காரணமாக நேற்று முன்தினம் சுப்ரமணியை, சிவக்குமார் திட்டி தாக்கினார்.
செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து சிவக்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.