/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண்ணிடம் அத்துமீற முயன்றவர் கைது
/
பெண்ணிடம் அத்துமீற முயன்றவர் கைது
ADDED : ஆக 24, 2025 10:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த கலிஞ்சிக்குப்பத்தை சேர்ந்தவர் முருகன் மகன் பாவாடைராயன், 21; இவர், நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த திருமணமான, 23 வயது பெண்ணை திட்டி, மிரட்டி கையை பிடித்து இழுத்து தவறாக நடக்க முயன்றுள்ளார்.
அவரது கணவர் கொடுத்த புகாரின்பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து பாவாடைராயனை கைது செய்து விசாரிக்கின்றனர்.