sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

15 சவரன் நகையை கடனாக வாங்கி ஏமாற்றியவர் கைது

/

15 சவரன் நகையை கடனாக வாங்கி ஏமாற்றியவர் கைது

15 சவரன் நகையை கடனாக வாங்கி ஏமாற்றியவர் கைது

15 சவரன் நகையை கடனாக வாங்கி ஏமாற்றியவர் கைது


ADDED : அக் 25, 2025 06:28 AM

Google News

ADDED : அக் 25, 2025 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: நண்பரிடம், 15 சவரன் தங்க நகையை கடனாக வாங்கி ஏமாற்றியவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம், ஓம்சக்தி நகர் சென்னை மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சதீஷ்குமார், 35; மர வியாபாரம் செய்து வருகிறார்.

இவர், தனது தொழில் முதலீட்டுக்காக, கல்லுாரி நண்பரான, விழுப்புரம் அடுத்துள்ள புருஷானுாரை சேர்ந்த சுதாகர் மனைவி திவ்யா,34; என்பவரிடம், கடந்த 2023ம் ஆண்டு கடனாக பணம் கேட்டுள்ளார்.

தொழிலில் வரும் லாபத்தில் பங்கு தருவதாக அவர் கூறியதை நம்பி, திவ்யா தான் வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான 15 சவரன் நகைகளை, சதீஷ்குமாரிடம் கொடுத்துள்ளார்.

ஆனால், நகையை வாங்கிச்சென்ற அவர், லாபத்தில் பங்கும் தராமல், நகையையும் திருப்பித்தராமல் ஏமாற்றி வந்துள்ளார். சமீபத்தில் நேரில் சென்று கேட்டபோது, திவ்யாவை திட்டி, அவர் மிரட்டி அனுப்பியுள்ளார்.

இது குறித்து, திவ்யா அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து, சதீஷ்குமாரை நேற்றுகைது செய்தனர்.






      Dinamalar
      Follow us