ADDED : நவ 10, 2025 03:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: காணை அருகே போதையில் பெண்ணை திட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த கொண்டங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்கொழுந்து மனைவி சிவகாமி, 40; இவர், கடந்த 2ம் தேதி சாலையில் நடந்து சென்றபோது, அதே கிராமத்தை சேர்ந்த சுந்தர்ராஜன், 34; குடி போதையில் சிவகாமியை திட்டினார்.
இது குறித்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து சுந்தர்ராஜனை கைது செய்தனர்.

