/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரயிலில் மதுபாட்டில் கடத்தியவர் கைது
/
ரயிலில் மதுபாட்டில் கடத்தியவர் கைது
ADDED : ஜன 11, 2025 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், ரயிலில் மதுபாட்டில் கடத்திச் சென்றவர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் ரயில்வே போலீசார், சப் இன்ஸ்பெக்டர் ஜூலி தலைமையில் நேற்று மாலை 4.00 மணிக்கு சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, புதுச்சேரியிலிந்து சென்னை செல்லும் பாசஞ்சர் ரயிலில் வந்த சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியைச் சேர்ந்த சதீஷ், 28; என்பவர், பையில் 20 பிராந்தி பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிந்தது.
இதனையடுத்து, ரயில்வே போலீசார் அவரை கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

