sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மூதாட்டியிடம் கவரிங் செயின் பறிப்பு தங்க நகை என ஏமாந்தவர் கைது

/

மூதாட்டியிடம் கவரிங் செயின் பறிப்பு தங்க நகை என ஏமாந்தவர் கைது

மூதாட்டியிடம் கவரிங் செயின் பறிப்பு தங்க நகை என ஏமாந்தவர் கைது

மூதாட்டியிடம் கவரிங் செயின் பறிப்பு தங்க நகை என ஏமாந்தவர் கைது


ADDED : செப் 19, 2024 11:11 PM

Google News

ADDED : செப் 19, 2024 11:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம்: வானுார் அருகே நடந்து சென்ற மூதாட்டியின் கவரிங் செயினை, தங்க செயின் என நினைத்து பறித்துச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

அனந்தபுரம் அடுத்த வரிக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தகிருஷ்ணன். இவரது மனைவி தேவகி, 75; இவர், நேற்று பிற்பகல் 2:15 மணிக்கு தேற்குணம் கிராமத்தில் தனது உறவினர் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

கிராமத்திலிருந்து தனது பேரனை பைக்கில் வரும்படி கூறிவிட்டு சிறிது துாரம் நடந்து சென்றார்.

அப்போது அய்யனார் கோவில் அருகே எதிரே வந்த நபர் தேவகியை கீழே தள்ளிவிட்டு அவர் அணிந்திருந்த கவரிங் செயினை, தங்கச் செயின் என நினைத்து, பறித்துக் கொண்டு தப்பியோடினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கிளியனுார் போலீசார், உடனடியாக நடவடிக்கை எடுத்து, செயினை பறித்துச் சென்ற எண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் கார்த்திக், 35; என்பவர் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us