ADDED : ஜூன் 28, 2025 12:48 AM

கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரத்தில் வாகன சோதனையின் போது லாரி பேட்டரி திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
கண்டாச்சிபுரம் மடவிளாகம் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் அய்யானர், 45; இவர் கடந்த 23ம் தேதி ரவிச்சந்திரன் எனபவரது இடத்தில் தனது டாரஸ் லாரியை நிறுத்திவிட்டு வீட்டிற்குச் சென்றார்.
மறுநாள் வந்து பார்த்தபோது லாரியில் இருந்த பேட்டரி திருடு போயிருந்தது. இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீசில் அய்யனார் புகார் அளித்தார்.
நேற்று அதிகாலை 3:00 மணிக்கு விழுப்புரம் - திருவண்ணாமலை ரோட்டில் சப்இன்ஸ்பெக்டர் காத்தமுத்து தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக பைக்கில் வந்த ஒடுவன்குப்பம் பகுதியைச் சேர்ந்த தெய்வமணி மகன் தேவராஜ், 29; என்பவரை பிடித்து விசாரித்தபோது, கடந்த சில நாட்களுக்கு முன்பு டாரஸ் லாரியில் இருந்த பேட்டரியைத் திருடியதை ஒப்புக்கொண்டார்.
விற்பனைக்காக வீட்டில் மறைத்து வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பேட்டரியை போலீசார் பறிமுதல் செய்து, தேவராஜை கைது செய்தனர்.