/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தகராறில் தாக்கப்பட்டவர் சாவு: உறவினர்கள் சாலை மறியல் செஞ்சி போலீஸ் நிலையம் முன் பரபரப்பு
/
தகராறில் தாக்கப்பட்டவர் சாவு: உறவினர்கள் சாலை மறியல் செஞ்சி போலீஸ் நிலையம் முன் பரபரப்பு
தகராறில் தாக்கப்பட்டவர் சாவு: உறவினர்கள் சாலை மறியல் செஞ்சி போலீஸ் நிலையம் முன் பரபரப்பு
தகராறில் தாக்கப்பட்டவர் சாவு: உறவினர்கள் சாலை மறியல் செஞ்சி போலீஸ் நிலையம் முன் பரபரப்பு
ADDED : மே 02, 2025 07:14 AM

செஞ்சி: செஞ்சியில் தகராறில் தாக்கப்பட்ட நபர் இறந்ததையடுத்து, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், செஞ்சி சிறுகடம்பூர், வெள்ளக்குளம் பகுதியை சேர்ந்தவர் சாலமன், 47; மரம் வாங்கி, சூளையிட்டு மரக்கரி வியாபாரம் செய்து வருகிறார்.
அதே பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த், 34; மர வியாபாரம் செய்து வருகின்றனர்.
மர வியாபாரத்தில் சாலமனுக்கும், பிரசாந்திற்கும் முன் விரோதம் உள்ளது. இதன் காரணமாக கடந்த 29ம் தேதி இரவு 10:00 மணிக்கு பிரசாந்த், அவரது மனைவி உஷா மற்றும் உறவினர்கள் சேர்ந்து சாலமனிடம் தகராறு செய்து தாக்கினர். இதனை தடுத்த சாலமன் உறவினர்களான ஏழுமலை மகன் வெற்றி, 19; மரியா மகன் மோகன், 24; சக்தி மகன் தமிழ், 23; ஆகியோரும் தாக்கப்பட்டனர்.
காயமடைந்த சாலமன், வெற்றி, மோகன், சக்தி ஆகியோர் செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதில், வெற்றி சென்டைன ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று காலை அவர் இறந்தார்.
தகவலறிந்த செஞ்சி போலீசார், பிரசாந்த் தரப்பை சேர்ந்த சிலரை நேற்று அதிகாலை விசாரணைக்காக அழைத்து வந்தனர். இந்நிலையில், வெற்றியின் உறவினர்கள் நேற்று காலை 7:00 மணிக்கு செஞ்சி கூட்ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் அவர்களை சமாதானம் செய்து அழைத்து வந்தபோது, மகளிர் போலீஸ் நிலையம் முன் மீண்டும் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த டி.எஸ்.பி., கார்த்திகா பிரியா, அவர்களை சமாதானம் செய்தார்.
மேலும், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக கூறியதை தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
இது குறித்து சாலமன் கொடுத்த புகாரின் பேரில், செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து பிரசாந்த், உஷா, மணிகண்டன், மணிமாறன், சி.மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர்.