ADDED : ஜூலை 25, 2025 10:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; விழுப்புரம் அருகே பைக்கிலிருந்து மயங்கி விழுந்த டிரைவர் இறந்தார்.
விழுப்புரம் அடுத்த மேல்பாதியைச் சேர்ந்தவர் விமலன், 41; கடலுாரில் தனியார் டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் டிரைவராக உள்ளார். இவர், நேற்று முன்தினம் மாலை கும்பகோணம் நெடுஞ்சாலையில் தனது பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
கோலியனுார் வந்தபோது, பைக்கிலிருந்து திடீரென மயங்கி விழுந்தார். உடன் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.