/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மஞ்சுளா டி.வி.எஸ்., ஷோரூம் திறப்பு விழா
/
மஞ்சுளா டி.வி.எஸ்., ஷோரூம் திறப்பு விழா
ADDED : ஆக 14, 2025 11:43 PM

செஞ்சி: மஞ்சுளா டி.வி.எஸ்., ஷோரூம் திறப்பு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கண்டாச்சிபுரத்தில், புதிதாக மஞ்சுளா டி.வி.எஸ்., ஷோரூம் திறப்பு விழா நேற்று நடந்தது. உரிமையாளர்கள் தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் கதிரவன், மஞ்சுளா கதிரவன் தலைமை தாங்கினர். சங்கமித்ரா, சாய்ஹர்ஷன் முன்னிலை வகித்தனர்.
பொது மேலாளர் அஜய் வரவேற்றார். சென்னை ஸ்ரீதுள்ஸி தங்கமாளிகை, மெடிக்கேர் உரிமையாளர் ரமேஷ்சந்த் புதிய ஷோரூமை திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார்.
டி.வி.எஸ்., மோட்டார்ஸ் விற்பனை பிரிவு ஏரியா விற்பனை மேலாளர் அர்ஜுன், சர்வீஸ் மேலாளர் அருள்மணி செல்வன் ஆகியோர் பணிமனை மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை பிரிவை திறந்து வைத்தனர்.
டி.வி.எஸ்., மோட்டாஸ் விற்பனை பிரிவு பகுதி மேலாளர் சந்தோஷ் ஜேம்ஸ், பங்கஜ் விஷால் ஆகியோர் முதல் விற்பனையை துவக்கி வைத்தனர்.
நெட்ஒர்க் மேலாளர் கார்த்திகேயன் ஒர்க் ஷாப் பிரிவை துவக்கிவைத்தார்.
இதில் முன்னாள் அரசு வழக்கறிஞர் சிவா, செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார், டாக்டர் மூர்த்தி, வழக்கறிஞர் கிருஷ்ணராஜ், ரோட்டரி சங்க தலைவர் குணசேகரன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், வழக்கறிஞர்கள், வர்த்தகர்கள், அரசு அலுவலர்கள், ஊழியர்கள், குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
கிளை மேலாளர் அய்யப்பன் நன்றி கூறினார்.