sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மரக்காணம் சாராய வழக்கு வாலிபர் குட்கா கடத்தல் வழக்கில் கைது

/

மரக்காணம் சாராய வழக்கு வாலிபர் குட்கா கடத்தல் வழக்கில் கைது

மரக்காணம் சாராய வழக்கு வாலிபர் குட்கா கடத்தல் வழக்கில் கைது

மரக்காணம் சாராய வழக்கு வாலிபர் குட்கா கடத்தல் வழக்கில் கைது

1


ADDED : ஏப் 19, 2025 04:40 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 04:40 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுாரில் ரூ. 6 லட்சம் மதிப்புள்ள 280 கிலோ குட்கா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றம் போலீசார் நேற்று மாலை ஆனத்துாரில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது பைக்கில் மூட்டையுடன் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். மூட்டையில் குட்கா இருப்பது தெரியவந்தது.

விசாரணையில், பைக்கில் வந்தவர் மரக்காணம் கரிபாளையத்தை சேர்ந்த முருகன் மகன் மதன்குமார், 30; திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.குமாரமங்கலத்தில் வாடகை வீட்டில் தங்கி, குட்கா பொருட்களை பல பகுதிகளுக்கு சப்ளை செய்து வருவதும், வீட்டில் 280 கிலோ குட்கா பாக்கெட்டுகள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.

அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று, மதன்குமார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த குட்கா மூட்டைகள், 7 மொபைல்போன்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய ஸ்கூட்டர், ரூ. 70 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பொருட்களின் மதிப்பு ரூ. 6 லட்சம்.

கைது செய்யப்பட்ட மதன்குமார் மரக்காணம் எரிசாராய வழக்கில் தொடர்புடையவர் என்பதும், ஏற்கனவே இவர் மீது 3 சாராய வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடதக்கது.






      Dinamalar
      Follow us