ADDED : டிச 06, 2024 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை: வளத்தி அருகே முகமூடி அணிந்து ஆடுகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வளத்தி அடுத்த வேட்டைக்காரன்பட்டி கூட்ரோடைச் சேர்ந்த ராமன், 49; இவரது வீட்டு பின்புறத்தில் ஆடுகளைக் கட்டி வைத்திருந்தார். நேற்று முன்தினம் காலையில் பார்த்தபோது 2 ஆடுகள் காணாமல் போனது.
வீட்டிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பார்த்தபோது அதிகாலை 2:00 மணியளவில் வெள்ளை நிற காரிலிருந்து இறங்கிய முகமூடி அணிந்த 2 மர்ம நபர்கள் ஆடுகளை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதே போல் இவரது வீட்டின் அருகே உள்ள வெங்கடேசன் என்பவரது 2 ஆடுகளும் திருடு போனது.
புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.