/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மண்டல அளவிலான கபடி போட்டி மயிலாடுதுறை கல்லுாரி வெற்றி
/
மண்டல அளவிலான கபடி போட்டி மயிலாடுதுறை கல்லுாரி வெற்றி
மண்டல அளவிலான கபடி போட்டி மயிலாடுதுறை கல்லுாரி வெற்றி
மண்டல அளவிலான கபடி போட்டி மயிலாடுதுறை கல்லுாரி வெற்றி
ADDED : நவ 21, 2024 12:21 AM

விழுப்புரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் சார்பில் இரு மண்டலங்களுக்கு இடையே பெண்களுக்கான கபடி போட்டி விழுப்புரம் அண்ணாதுரை அரசு கலைக் கல்லூரியில் நடந்தது.
இதில், விழுப்புரம், கடலூர் மண்டல அளவில் முதலிடம், 2வது இடம் பெற்றோர் இரு மண்டலத்தில் இருந்தும் மொத்தம் நான்கு அணிகள் பங்கேற்றன. லீக் முறையில் போட்டி நடைபெற்றது.
போட்டியை கல்லூரி முதல்வர் சிவக்குமார், அனைத்து விளையாட்டு கழகங்களின் ஒருங்கிணைப்பாளர் மணி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஆதிவாசன் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் துவக்கி வைத்தனர்.
மயிலாடுதுறை ஞானாம்பிகை அரசு கலைக்கல்லூரி, அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி துறை அணி, கள்ளக்குறிச்சி அரசு கலைக்கல்லூரி, வானுார் ஸ்ரீ அரவிந்தர் கலைக் கல்லூரி ஆகிய நான்கு அணிகளுக்கு போட்டி லீக் முறையில் நடந்தன. இதில், ஞானாம்பிகை அரசு கலைக் கல்லூரி முதலிடத்தை பிடித்தது.
கள்ளக்குறிச்சி அரசு கலைக் கல்லூரி 2வது இடத்தையும், ஸ்ரீ அரவிந்தர் கலைக்கல்லூரி மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வித்துறை அணி 3வது இடத்தை பிடித்தன.
இதில், வென்ற மாணவிகளுக்கு விளையாட்டுதுறை இணை இயக்குனர் வெங்கடாஜலபதி பரிசளித்தார். போட்டியை உடற்கல்வி இயக்குனர் ஜோதிப்பிரியா ஒருங்கிணைத்தார்.